search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நடிகை ஸ்ரீபிரியா"

    நடிகைகள் பாலியல் தொடர்பு புகார் அளித்தால் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நடிகர் சங்கத்தின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது என்று நடிகை ஸ்ரீபிரியா தெரிவித்துள்ளார். #MeToo #Sripriya #Vishal
    சேலம்:

    சேலத்தில் நடிகை ஸ்ரீபிரியா நிருபர்களிடம் கூறியதாவது:-

    நடிகைகள் பாலியல் தொடர்பு புகார் அளித்தால் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நடிகர் சங்கத்தின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. எந்த ஒரு புகார் என்றாலும் விசாரிக்கப்பட வேண்டும்.


    சின்மயி பொறுப்பானவர். தான்தோன்றித்தனமாக பேசக்கூடியவர் அல்ல. ஏன்? முன்பே அவர் சொல்லவில்லை என்பது இரண்டாம்பட்சம். இப்போதாவது வெளியானதே என்பது முக்கியம்.

    இதனால் வருங்காலங்களில் இது போன்ற சம்பவங்கள் குறையும். திரைத்துறை மட்டுமல்ல, எந்த இடத்தில் பெண்களுக்கு தொல்லைகள் நேர்ந்தாலும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #MeToo #Sripriya #Vishal
    தமிழகத்தில் 2 திராவிட கட்சிகளும் ஊழல் பேர்வழிகள் என்று நடிகை ஸ்ரீபிரியா தெரிவித்தார்.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல்லில் மக்கள் நீதிமய்யம் சார்பில் கொடியேற்று விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், நடிகையுமான ஸ்ரீபிரியா, பாடலாசிரியர் சினேகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் நிருபர்களுக்கு நடிகை ஸ்ரீபிரியா பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் அரசியலுக்கு யார் வேண்டுமானலும் வரலாம். அதற்கு அவர்களுக்கு உரிமை உள்ளது. மக்கள் யாரை நம்புகின்றனர் என்பதுதான் முக்கியம்.

    தமிழகம் இனியாவது நன்றாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்துள்ளோம். காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக திராவிட கட்சிகளுக்கு மக்கள் ஆதரவு தந்தனர். தற்போது திராவிட கட்சிகளுக்கு மாற்று வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர்.

    தமிழகத்தில் ஊழல் அற்ற ஆட்சி அமைய வேண்டும். எனவே வாக்குகளை தயவு செய்து விற்க வேண்டாம். தமிழகத்தில் 2 திராவிட கட்சிகளும் ஊழல் பேர்வழிகள்தான். கட்சியின் உறுப்பினர் எண்ணிக்கைக்கும், வெற்றிக்கும் தொடர்பு இல்லை. அதிக உறுப்பினர்களை வைத்துள்ள கட்சிகூட பல சமயங்களில் டெபாசிட் இழந்து வருகிறது.

    ரஜினி இன்னும் அரசியலுக்கே வரவில்லை. அவர் வந்தபிறகுதான் அது குறித்து கருத்து தெரிவிக்க முடியும். அவர் எனக்கு நல்ல நண்பர். இருந்தபோதும் நட்பு வேறு, கொள்கை வேறு.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.
    தமிழகத்தில் மாற்றம் தேவை. அந்த மாற்றத்தை கமல்ஹாசன் தருவார் என்று கடலூரில் நடைபெற்ற மக்கள் நீதி மய்யம் கூட்டத்தில் நடிகை ஸ்ரீபிரியா பேசினார். #kamal #actresssripriya

    கடலூர்:

    கடலூர் மாவட்ட மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மற்றும் மாவட்ட புதிய நிர்வாகிகள் அறிமுக விழா கடலூர் டவுன்ஹாலில் நடந்தது. கூட்டத்தில் நடிகையும், மாநில செயற்குழு உறுப்பினருமான ஸ்ரீபிரியா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    நடிகர்களுக்கு என்ன தெரியும் என்கிறார்கள். கலைஞர் கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் கலைத்துறையில் இருந்து தான் ஆட்சிக்கு வந்தார்கள். ஆகவே நடிகர்கள் அரசியலுக்கு வருவது தவறில்லை.

    மக்களுக்கு சேவை செய்வதற்காக தான் கமல்ஹாசன் அரசியலுக்கு வந்திருக்கிறார். மாதம் 1 ரூபாய் சம்பளம் என்று நாட்டை கொள்ளையடிக்க மாட்டோம். உண்மையான அரசியல்வாதியாக கமல்ஹாசன் இருப்பார். தமிழ்நாட்டில் மக்களுக்கு மறதி அதிகம் உள்ளது. கொள்ளையடித்தவரை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற செய்து இருக்கிறார்கள்.

    பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் அரசியல் அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும். அப்போது தான் சிந்தித்து செயல்பட முடியும். மாற்றம் தேவை, அது யார்? என்பதை சிந்தித்து, நம்மவருக்கு (கமல்ஹாசன்) வாக்களிக்க வேண்டும்.

    இவ்வாறு ஸ்ரீபிரியா கூறினார்.

    கூட்டத்தில் கடலூர் மாவட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியை பலப்படுத்துவது, பெண்களை அதிக அளவில் கட்சியில் சேர்ப்பது, படித்த இளைஞர்கள், மகளிரணியை வைத்து உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துவது, வாரத்தில் ஒரு நாள் சுகாதார பணிகளை மேற்கொள்வது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    பின்னர் ஸ்ரீபிரியா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பெண்களுக்கு, குறிப்பாக சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்முறை அதிகரித்து உள்ளது. ஆட்சி அதிகாரம் சரியில்லாததால் தான் இது போன்ற சம்பவங்கள் நடக்கிறது. பள்ளிக்கூடங்களில் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஆண்களுக்கு எப்படி பெண்களை மதிக்க வேண்டும் என்று கற்றுக்கொடுக்க வேண்டும்.

    தமிழகத்தில் போதை பொருட்கள் அதிகரித்து விட்டது. சமீபத்தில் குட்கா ஊழலில் யாருக்கெல்லாம் தொடர்பு இருந்தது என்பதை நீங்கள் அறிந்து இருப்பீர்கள். தமிழகத்தில் மாற்றம் தேவை. அந்த மாற்றத்தை கமல்ஹாசன் தருவார்.

    இவ்வாறு அவர் கூறினார். #kamal #actresssripriya

    ×